Published : 24 Jul 2019 08:16 AM
Last Updated : 24 Jul 2019 08:16 AM

தெலுங்கு தேசம் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

என்.மகேஷ்குமார்

அமராவதி 

ஆந்திர மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. இதில், நேற்று பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித் துகள், பழங்குடியினர், சிறுபான் மையினர் மற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் உதவித் தொகைக்கான வயது உச்ச வரம்பை 45-க்கு கொண்டு வருவது குறித்து அவையில் விவா தம் நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி குறித்து விவாதிக்க வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) உறுப்பினர் ராமா நாயுடு கோரிக்கை விடுத்தார்.

இதனால், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது முதல்வர் ஜெகன் பதிலளிக்கையில், இது போன்ற வாக்குறுதியை நான் வழங்க வில்லை என கூறினார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி ஒரு பொதுக்கூட் டத்தில் இதுகுறித்து பேசிய வீடியோ அவையில் வெளியிடப் பட்டது. ஆனால், தங்களிடம் உள்ள வீடியோவையும் வெளியிட சபாநாயகர் அனுமதிக்க வேண்டு மென டிடிபி உறுப்பினர்கள் சபா நாயகரிடம் முறையிட்டனர். இதை அவர் ஏற்க மறுத்ததால் டிடிபி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவையை நடத்த விடாமல் தடுக்கும் டிடிபியை சேர்ந்த அச்சம் நாயுடு, ராமா நாயுடு, புச்சைய்ய சவுதரி ஆகிய 3 பேரை யும் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென அமைச்சர் ராஜேந்திர பிரசாத் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் சம்பந்தப் பட்ட 3 பேரையும் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x