

ஜம்மு
அமர்நாத் யாத்திரை சென்றவர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
அனந்த் நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் இதற்கான யாத்திரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி, 46 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.யாத்திரைக்கு நாடு முழுவதி லும் இருந்து இதுவரை 1.5 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர்.
இந்த ஆண்டு யாத்திரை வந்த இடத்தில் உடல்நலக்குறைவு, உயரமான மலைப்பகுதியில் பிராணவாயு பற்றாக்குறையால் அடுத்தடுத்து 16 பேர் உயிரிழந்திருந்தனர். இவர்களின் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மேலும் இருவர் யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களாக சேவை செய்தவர்கள். மற்றவர்கள் யாத்திரை வந்த மக்கள். இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மேலும் 6 பக்தர்கள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.