Published : 16 Jul 2019 05:53 PM
Last Updated : 16 Jul 2019 05:53 PM
மும்பை கேசர் பாய் குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மும்பை டோங்கிரி பகுதியில் முகமது அலி சாலையில் உள்ள அப்துல் ஹமீது தர்கா அருகே கேசர் பாய் என்ற குடியிருப்பு உள்ளது. 4 மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 12 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். மகாராஷ்டிர அரசு, உள்ளூர் அதிகாரிகள், தேசிய பேரிடர் பணி வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.
Collapse of a building in Mumbai’s Dongri is anguishing. My condolences to the families of those who lost their lives. I hope the injured recover soon. Maharashtra Government, NDRF and local authorities are working on rescue operations & assisting those in need: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 16, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT