Published : 16 Jul 2019 01:03 PM
Last Updated : 16 Jul 2019 01:03 PM

தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பைச் சேர்ந்த தீவிவராதி ஸ்ரீநகரில் கைது

தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை டெல்லி போலீஸ் சிறப்பு குழுவினர் ஸ்ரீநகரில் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை இன்று கைது செய்துள்ளனர். கைதான தீவிரவாதியின் அடையாளம் தெரியவந்துள்ளது. அவரது பெயர் பஷீர் அஹமது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சிறப்பு போலீஸ், ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஃபயாஸ் அஹமது லோன் என்பவரைக் கைது செய்தது. 

அதற்கும் முன்னதாக, கடந்த மார்ச் மாதம், சஜ்ஜாத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முதாசீர் அகமது கானின் நெருங்கிய கூட்டாளி. டெல்லி செங்கோட்டை பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் இன்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி பஷீர் அஹமது கைது செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x