Published : 16 Jul 2019 09:22 AM
Last Updated : 16 Jul 2019 09:22 AM

ஆந்திர தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவரானார் ரோஜா

குண்டூர்

ஆந்திர மாநில தொழில்துறை கட்டமைப்பு நிறுவனத் தலைவராக நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா நேற்று பொறுப்பேற்றார்.

ஆந்திராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார்.

இந்த தேர்தலில் தனது தொகுதி மட்டுமின்றி ஆந்திராவின் ஏனைய தொகுதிகளிலும் நடிகை ரோஜா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு அவரது பிரச்சாரமும் காரணம் என பரவலாக பேசப்பட்டது.

இதனால், அவருக்கு அமைச் சரவையில் இடம் கிடைக்கும் பேச்சுகள் அடிபட்டன. ஆனால், ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, ரோஜாவும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ரோஜாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவரை ஆந்திர மாநில தொழில் துறை கட்டமைப்பு நிறுவனத் தலைவராக முதல்வர் ஜெகன் மோகன் அண்மையில் நியமித் தார். இந்நிலையில், அந்த பொறுப்பை நடிகை ரோஜா நேற்று ஏற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x