Published : 15 Jul 2019 06:21 AM
Last Updated : 15 Jul 2019 06:21 AM

மியான்மரில் இந்தியா கட்டிய 250 வீடுகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக் காக மியான்மரில் இந்தியா கட்டி யுள்ள 250 வீடுகள் அந்நாட்டு அர சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென ராணுவத்துக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் மோதல் வெடித்தது. இதில் பலர் கொல் லப்பட்டனர். இதையடுத்து லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு எந்த வசதியும் இல்லாத முகாம்களில் 7 லட்சம் மியான் மர் முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இந்தியாவிலும் ஆயிரக்கணக் கில் ரோஹிங்கியா முஸ்லிம் கள் வந்தனர். அவர்களை மீண் டும் மியான்மர் அரசு அழைத்துக் கொள்ள வேண்டும் என்று இந் தியா உட்பட சர்வதேச நாடுகள் மியான்மர் அரசை வலியுறுத்தி வருகின்றன.

முஸ்லிம்கள் தங்கள் தாயகம் திரும்பினால் தங்கு வதற்கு 25 மில்லியன் டாலர் செலவில் இந்தியா சார்பில் 250 வீடுகள் மியான்மரில் கட்டப் பட்டுள்ளன. அந்த வீடுகளை கடந்த 9-ம் தேதி அந்நாட்டு அர சிடம் மியான்மருக்கான இந்திய தூதர் சவுரப் குமார் ஒப்படைத் தார். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் 40 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள் ளன. மியான்மரில் ஏற்பட்ட வன் முறையில் அதிகம் பாதிக்கப்பட்ட 3 பகுதிகளில் இந்தியா வீடுகளைக் கட்டித் தந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x