Last Updated : 20 Jul, 2015 09:15 AM

 

Published : 20 Jul 2015 09:15 AM
Last Updated : 20 Jul 2015 09:15 AM

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி இருவர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, இருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மும்பை-புனே விரைவு சாலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்ததில் அதில் பயணம் செய்த இருவர் பலியானார். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அந்த சாலை மூடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இதற்கு முன்பு கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக இதே சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x