Published : 03 May 2014 11:41 AM
Last Updated : 03 May 2014 11:41 AM

அசாம் நிலவரத்தை பிரதமரிடம் விவரித்தார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவசங்கர மேனன் விவரித்தார்.

அசாமில் இரண்டு மாவட்டங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இன்று காலை பிரதமரை நேரில் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவசங்கர மேனன், அசாம் நிலவரம் குறித்து விவரித்ததாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர், பிரதமர் கேபினட் செயலர் அஜித் சேத்திடம் மாநிலத்தில் அமைதி ஏற்பட போதிய உதவிகளை செய்யுமாறு பணித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x