அக். 2-ல் ஹசாரே உண்ணாவிரத போராட்டம்

அக். 2-ல் ஹசாரே உண்ணாவிரத போராட்டம்
Updated on
1 min read

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்தும், ராணுவ வீரர்களுக்கு ஒரே அளவிலான ஓய்வூதியத்தை வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு படப்போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கு கிறேன்” எனத் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் ஒரே தகுதி நிலையிலான ராணுவ வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு ஹசாரே கடிதம் எழுதியிருந்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஹசாரேவுக்கு நாடு தழுவிய அளவில் பெரும் வரவேற்பு கிடைத் தது. இந்நிலையில் அவர் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத் தப்போவதாக தெரிவித்துள்ளார்.

வரும் 26-ம் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர் குடும்பத்தைச் சேர்ந்த விதவைகள், ராணுவ வீரர்களின் தாய் ஆகியோரை அவர் கவுரவிக்க உள்ளார். தொடர்ந்து, விவசாயிகள், ராணுவ வீரர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்தப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in