Published : 05 Jul 2015 12:05 PM
Last Updated : 05 Jul 2015 12:05 PM
பிரதமர் நரேந்திர மோடிக்கு வலதுசாரி தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக சமூக இணையதளங்களில் வெளியான தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பயிற்சி முகாமுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தபோது, பிரதமர் மோடிக்கு வலதுசாரி தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக சமூக இணையதளங்களில் தகவல் வெளியானது. யோகா பயிற்சியில் முஸ்லிம்களையும் ஈடுபடுத்த மோடி முயற்சிப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட் டது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிரதமருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது. வலதுசாரி தீவிரவாதிகளிடமிருந்து மோடிக்கு எவ்வித அச்சுறுத்தலும் வரவில்லை” என கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT