Published : 30 Jul 2015 08:55 AM
Last Updated : 30 Jul 2015 08:55 AM

மும்பையில் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு: யாகூப் மேமன் வழக்கு கடந்து வந்த பாதை

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.குண்டு வெடிப்பு நடந்த 93-ம் ஆண்டில் இருந்து இன்று வரை மேமன் கடந்துவதந்த பாதை விவரம்:

1993 மார்ச் 12:

மும்பையில் 13 இடங்களில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர்.

1993 ஏப்ரல் 19:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.

1993 நவம்பர் 4:

சஞ்சய் தத் உட்பட 189 பேருக்கு எதிராக 10 ஆயிரம் பக்க முதல்நிலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1993 நவம்பர் 19:

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

1994 ஏப்ரல் 1:

இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆர்த்தர் சாலை மத்திய சிறை வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

2003 செப்டம்பர்:

விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.

2006 ஆகஸ்ட் 10:

செப்டம்பர் 12-ல் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி பி.டி.கோடே அறிவித்தார்.

2006 செப்டம்பர் 12:

தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட னர். யாகூப் உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட் டது. 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

2011 நவம்பர் 1:

100 குற்றவாளிகள் தரப்பிலும் அரசு சார்பிலும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

2012 ஆகஸ்ட் 29:

விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.

2013 மார்ச் 21:

யாகூப் மேமனின் மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது.

2013 ஜூலை 30:

யாகூப் மேமனின் முதல் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2014 ஏப்ரல் 11:

யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

2014 ஜூன் 2:

மேமனின் 2-வது மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

2015 ஏப்ரல் 9:

மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2015 ஜூலை 21:

சீராய்வு மனுவை (கடைசி வாய்ப்பு) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2015 ஜூலை 23:

சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால், ஜூலை 30-ல் மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

2015 ஜூலை 28:

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 ஜூலை 29:

சட்ட நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

2015 ஜூலை 30:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமன் அதிகாலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x