Published : 12 Jul 2015 11:49 AM
Last Updated : 12 Jul 2015 11:49 AM
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உறவினர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.
தாவூதின் சகோதரி மற்றும் அவரது உறவினர்களின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களுக்கு வருமானம் எப்படி வந்தது, எவ்வாறு சொத்துகளை வாங்கினர், அது சட்டப்பூர்வமான சொத்துகள்தானா என்பவை குறித்து உரிய விளக்கம் பெற முடியவில்லை.
எனவே அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாவூத் உறவினர்களுக்கு பிரிட்டனில் ஹோட்டல், அந்த நாட்டின் கென்ட் நகரில் சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2500 கோடி ஆகும். அந்த சொத்துகள் அமலாக்கத் துறையின் விசாரணையில் உள்ளன.
இந்த சொத்துகளின் விவரங் களைக் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியுறவுத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் தாவூத் உறவினர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT