5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி
Updated on
1 min read

புதுடெல்லி: ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார்.

டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020-ம் ஆண்​டில் ஷிகா​வுக்​கும் சாப்ட்​வேர் இன்​ஜினீயர் சவுரபுக்​கும் திரு​மணம் நடை​பெற்​றது. சில மாதங்​களி​லேயே இரு​வருக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் எழுந்​தன.

கணவர் வீட்டை விட்டு வெளி​யேறிய ஷிகா, தனது தாய் வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். கணவர் சவுரபிடம் இருந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நல நீதி​மன்​றத்​தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுமார் 5 ஆண்​டு​களாக நீதிமன்றத்தில் நடை​பெற்று வந்​தது.

இதனிடையே சில வாரங்​களுக்கு முன்பு ஷிகா​வின் தந்​தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. நிதிச்​சுமை காரண​மாக அவர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்த தகவல் சவுரபுக்கு தெரிய​வந்​தது. உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்ற அவர், குரு​கி​ராமில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மாம​னாரை சேர்த்​தார்.

மருத்​துவ சிகிச்​சைக்​கான முழுச்​செல​வையும் அவரே ஏற்​றுக் கொண்​டார். இதன்​காரண​மாக இரு குடும்​பங்​களுக்கு இடையே இருந்த கசப்​புணர்வு மறைந்​தது. ஷிகா​வின் மனநிலை​யிலும் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டது.

சில நாட்​களுக்கு முன்பு டெல்​லி​யில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் விவாகரத்து வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. இதில் ஆஜராக சவுரபும் ஷிகா​வும் நீதி​மன்​றத்​துக்கு சென்​றனர்.

அப்​போது நீதி​மன்ற வளாகத்​தில் கணவரை பார்த்த ஷிகா, ஓடோடிச் சென்று கட்​டியணைத்து கதறி அழு​தார். தனது கையில் வைத்​திருந்த விவாகரத்து வழக்கு ஆவணங்​களை கிழித்​தெறிந்து வீசி​னார்.

இதன்​பின்​னர் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெறு​வ​தாக இரு​வரும் நீதிப​தி​யிடம் முறை​யிட்​டனர். இதை நீதிபதி மகிழ்ச்​சி​யுடன் ஏற்றுக் கொண்​டார். நீதி​மன்ற வளாகத்​தில் சவுரபும் ஷிகா​வும்​ உணர்​ச்​சிப்​பெருக்​கில்​ கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில்​ வைரலாக பரவி வருகிறது.

5 ஆண்டு கால விவாகரத்து வழக்கின் ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி
பிரான்ஸில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு: அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in