Published : 09 Jul 2015 09:59 AM
Last Updated : 09 Jul 2015 09:59 AM
‘வியாபம்’ வழக்கில் குற்றம்சாட்டப் பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி கடந்த வாரம் சிறையில் மர்மமாக மரண மடைந்ததையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடைய 17 கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தூர் மாவட்ட சிறை கண் காணிப்பாளர் ஆர்.எஸ் பாட்டி கூறியதாவது:
‘வியாபம்’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ள 17 கைதிகளை, 24 மணி நேர மருத்துவமனை வசதி மற்றும் போதிய மருத்துவ ஊழியர்கள் உள்ள சிறைக்கு மாற்றும்படி விரைவில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க உள்ளோம். இங்கு, தற்போது 920 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு பகுதிநேர மருத்துவரே உள்ளார். இரவில் அவரும் இருக்கமாட்டார். அதுபோன்ற சமயங்களில் கம்பவுண்டர், ஆண் செவிலியர் ஆகியோரையே சார்ந் திருக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
‘வியாபம்’ வழக்கில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி நரேந்திர சிங் டோமர் (30) கைது செய்யப்பட்டார். மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 27-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அவர் சிறையிலேயே இறந்தபிறகே மருத்துவமனை கொண்டுவரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்தே ‘வியாபம்’ கைதிகளை இடமாற்றம் செய்ய இந்தூர் மாவட்ட சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT