Published : 26 Jul 2015 10:43 AM
Last Updated : 26 Jul 2015 10:43 AM
டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அக்கட்டிடத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் ஒருவர் பலியானார்.
டெல்லி ஆர்.கே. புரத்தில் சிஆர்பிஎஃப் அலுவலகம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு ஏழு தீயணைப்பு லாரிகளை அனுப்பி வைத்தனர். அந்தத் தீ சில மணி நேரத்தில் அணைக்கப்பட்டது.
எனினும், தீயணைப்பின்போது அதிகாரிகள் விடுத்த அபாய அழைப்பை அறியாமல் அங்கு பணியில் இருந்த தலைமை கான்ஸ்டபிள் தூங்கிக் கொண் டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.
இந்தக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த பல மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் இந்த விபத்தில் தீக்கிரையாகின. இங்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பை அறிய தற்போது அங்கு போலீஸார் விசரரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT