Published : 20 Jul 2015 08:04 AM
Last Updated : 20 Jul 2015 08:04 AM
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள னர். இதில் மகாராஷ்டிரா முதலிடத்தையும் தெலங்கானா 2-ம் இடத்தையும் பிடித்தது.
இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவண அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
நாடு முழுவதும் கடந்த ஆண் டில் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 2,568 பேர் மகாராஷ்டிர மாநிலத் தைச் சேர்ந்தவர்கள். அடுத்தபடி யாக தெலங்கானா மாநிலத்தில் 898 பேரும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 826 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் ஆண்கள் 5,178, பெண்கள் வெறும் 472. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். குடும்பப் பிரச்சினை மற்றும் கடன் தொல்லை ஆகியவையே தற்கொலைக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 2013-ம் ஆண்டில் சுமார் 3,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் விவசாயிகள் தற்கொலை சற்று குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT