Last Updated : 16 Jul, 2015 02:15 PM

 

Published : 16 Jul 2015 02:15 PM
Last Updated : 16 Jul 2015 02:15 PM

மேக் இன் இந்தியா போர்க் கப்பல் திட்டம்: ரிலையன்ஸ் உடன் ரஷ்யா ஒப்பந்தம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரஷ்யாவுடன் கூட்டாக இணைந்து இந்திய கடற்படைக்கான போர்க் கப்பல்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்திய கடற்படைக்கு உபயோகமாகக்கூடிய போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை 'மேக் இன் இந்தியா' வழிகாட்டுதலின்படி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமாக பிபாவாவ் கப்பல் கட்டும் நிறுவனத்தை ரஷ்ய அரசு தேர்வு செய்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கட்டங்களாக இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனத்தை ரஷ்ய அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் அந்த நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

நவீன முறையில் உள்நாட்டிலேயே தயாராகப்போகும் போர்க்கப்பல்களுக்கு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என திட்டமதீப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் அனைத்தும் இதுவரை வெளிநாடுகளிலிருந்து பொதுத்துறை கப்பல்கட்டும் தளங்களுடன் ஒப்பந்தம் முறையில் பெறப்பட்டதாகும்.

எனவே இந்தியாவிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தனியார் போர்க்கப்பல் தயாரிப்பு ஒப்பந்தமாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x