Published : 30 Jul 2015 01:27 PM
Last Updated : 30 Jul 2015 01:27 PM
மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிட பிஹார் சிறைச்சாலையில் இருந்து தூக்குக் கயிறு அனுப்பப்பட்டுள்ளது.
பிஹார் மாநிலம் பக்சார் சிறையில் இருந்து நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனைக்கு தேவைப்பட்ட கயிறு அளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அச்சிறைச்சாலை கண்காணிப்பாளர் எஸ்.கே.சவுத்ரி கூறும்போது, "தூக்கு தண்டனை நிறைவேற்ற பிரத்யேக விதமான கயிறு தேவைப்படுகிறது. அந்த கயிறு பக்சார் சிறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் பல்வேறு தருணங்களில் பக்சார் சிறையில் இருந்து தூக்குக் கயிறு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக தனஞ்சய் சாட்டர்ஜீ கடந்த 2004-ல் கொல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அப்போதும் இங்கிருந்தே தூக்கு கயிறு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல், 2012-ல் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டபோதும் பக்சார் சிறையில் இருந்தே தூக்கு கயிறு அனுப்பப்பட்டது. அதே கயிறை பயன்படுத்தி 2013-ல் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.
தற்போது யாகூப் மேமனை தூக்கிலிடவும் பக்சார் சிறை கயிறே பயன்பட்டிருக்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT