Last Updated : 15 Jul, 2015 02:04 PM

 

Published : 15 Jul 2015 02:04 PM
Last Updated : 15 Jul 2015 02:04 PM

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: ஒருவர் பலி; 2 பேர் காயம்

காஷ்மீர் மாநிலம் அக்னூர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டத்தில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார் 2 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இது குறித்து எல்லை பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. காயமடைந்த வீரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x