Last Updated : 15 Jul, 2015 08:47 AM

 

Published : 15 Jul 2015 08:47 AM
Last Updated : 15 Jul 2015 08:47 AM

டீஸ்டா வீட்டில் சிபிஐ சோதனை

சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் வீடு உட்பட மும்பையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

செடல்வாட், அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் மற்றும் குலாம் முகம்மது பெஷிமாம் ஆகிய மூவரும் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் (எஸ்சிபிபிஎல்) என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.

இவர்கள் மூவரும் குற்றச் சதியில் ஈடுபட்டதாகவும், தங்களின் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நன்கொடை பெற்றதாகவும் கடந்த 8-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி வெளிநாட்டு நிதியை எஸ்சிபிபிஎல் நிறுவனத்துக்கு திருப்பி விட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள எஸ்சிபிபிஎஸ் அலுவலக வளாகம், செடால்வட், குலாம் முகமது ஆகியோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி மற்றும் பதிவு பெறாமல் வெளிநாட்டு நன்கொடையை சட்டவிரோதமாக பெற்றதாக மூவரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x