Last Updated : 19 Jul, 2015 11:46 AM

 

Published : 19 Jul 2015 11:46 AM
Last Updated : 19 Jul 2015 11:46 AM

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியை மம்தா பானர்ஜி அரசுதான் கொன்றது: மம்தாவின் உறவினர் பேச்சால் சர்ச்சை

மேற்குவங்க மாநிலம் ஜங்கிள் மகால் பிராந்தியத்தில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்தப் பகுதி ஒரு காலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி கொல்லப்பட்டார். அப் போது முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘முன்கூட்டியே திட்ட மிட்டு கிஷன்ஜி கொல்லப்பட வில்லை’’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், கிஷன்ஜியை கொன்றது மம்தா அரசுதான் என்று அவரது உறவினர் கூறியுள்ளார்.

மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பெல்பஹாரியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில் திரிணமூல் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜங்கிள்மகால் பகுதியில் பயங் கர வன்முறையில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியை, கடந்த 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி அரசுதான் கொன்றது. அங்குள்ள மக்கள் சுதந்திரமாக பேசும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது மம்தா. ஜங்கிள்மகால் பகுதியில் மாவோயிஸ்ட்களின் காலம் முடிந்து விட்டது. மக்கள் நிம்மதியாக வாழ்வதை திரிணமூல் காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது.

மாவோயிஸ்ட்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர பயந்தனர். இப்போது இங்கு அமைதி நிலவு கிறது. வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அபிஷேக் பானர்ஜி பேசினார்.

கிஷன்ஜியை திட்டமிட்டு கொல்லவில்லை என்று மம்தா கூறி யிருந்த நிலையில், மம்தா அரசு தான் கொன்றது என்று அவரது உற வினரே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x