Last Updated : 09 Jul, 2015 03:06 PM

 

Published : 09 Jul 2015 03:06 PM
Last Updated : 09 Jul 2015 03:06 PM

வியாபம் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு திக்விஜய் சிங் வரவேற்பு

வியாபம் ஊழல் வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், "இதன் மூலம், நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "வியாபம் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடியாது என சிவ்ராஜ்சிங் சவுஹான் கூறிவந்தார். ஆனால், அவருக்கு கடவுள் நல்ல புத்தி கொடுத்துள்ளார். எனவேதான் அவரது அரசு சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பல மர்ம மரணங்கள் பின்னணி கொண்ட மத்தியப் பிரதேசத்தின் 'வியாபம்' ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x