Last Updated : 05 Jun, 2015 09:42 AM

 

Published : 05 Jun 2015 09:42 AM
Last Updated : 05 Jun 2015 09:42 AM

அடுத்த 48 மணி நேரத்தில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நான்கு நாட்கள் தாமதத்துக்குப் பிறகு எந்த நேரத்திலும் பருவமழை பெய்யக்கூடும், அதற்கான அறி குறிகள் பிரகாசமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளாவில் பருவமழை பெய்த பிறகே நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக கருத்தில் கொள்ளப்படும்.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங் கும். ஆனால் மழை தொடங்கு வதற்கான அறிகுறிகள் இல்லாத தால் காலதாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நேற்று மேகமூட்டம் காணப்படுவதால் கேரளாவில் மழை தொடங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x