Published : 15 Jun 2015 08:30 AM
Last Updated : 15 Jun 2015 08:30 AM
இந்திய சந்தையில் விற்கப்படும் அனைத்து பாக்கெட் உணவுப் பொருட்களையும் பரிசோதனை செய்யுமாறு மாநில உணவுப் பாது காப்பு ஆணையர்களுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடூல்ஸ் வகைகளில் அளவுக்கு அதிகமாக காரீயம் இருப்பது கண் டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மேகி நூடூல்ஸின் 9 வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் அனுமதியின்றி சந்தையில் உணவுப் பொருட்களை விற்கின்றன. மேகி நூடூல்ஸ் விவகாரத்தைத் தொடர்ந்து இதர பாக்கெட் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கேள்வி எழுந்துள் ளது.
இதுதொடர்பாக மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சார்பில் அண்மையில் டெல்லியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள் பங்கேற்றனர்.
அப்போது, இந்திய சந்தையில் விற்கப்படும் அனைத்து பாக்கெட் உணவுப் பொருட்களின் மாதிரி களை சேகரித்து அவற்றின் தரம் குறித்து பரிசோதனை செய்யுமாறு மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. தவறுகள் கண் டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
மேலும் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 பாக்கெட் உணவுப் பொருட்களின் பட்டியல் மாநில உணவுப் பாதுகாப்பு ஆணை யர்களிடம் வழங்கப்பட்டது. இந்த உணவுப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதை தீவிர மாகக் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT