Published : 01 Jun 2015 03:27 PM
Last Updated : 01 Jun 2015 03:27 PM
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 100 ராகுல் காந்திகளை கொண்டு வந்து நிறுத்தினாலும் அவருக்கு இணையாக முடியாது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடியின் அரசை 'சூட் பூட் சர்க்கார்' என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்ததை தாக்கும் விதமாக காங்கிரஸ் அரசின் 'சூட்கேஸ் சர்க்காரை' விட 'சூட் பூட் சர்க்கார்' மேலானது என்று சிவசேனா தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மேலும் அதில் கூறியதாவது. "56 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல் வெளியே செல்வதிலும் பேசுவதிலும் ஈடுபடுகிறார். ராகுலின் நடவடிக்கை காங்கிரஸ்காரகளை கொஞ்சம் உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த உற்சாகும் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதுதான் கேள்வி. பிரதமர் மோடி என்கிற பேரலைக்கு முன்னர் 100 ராகுல் காந்திகள் சேர்ந்தாலும் இணையாக முடியாது.
2ஜி அலைகற்றை, சுரங்க ஊழல் செய்து சூட்கேஸ் நிரப்பியவர்களை 'சூட்கேஸ் சர்க்கார்' என்று பிரதமர் மோடி தெரிவித்தது முற்றிலும் உண்மையானது" என்று அதன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT