Published : 18 Jun 2015 03:23 PM
Last Updated : 18 Jun 2015 03:23 PM
பஞ்சாபில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இந்தப் பயணம் அவரால் முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சாபில் நிலவும் வறட்சியினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பதேகார் சாகிப் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி சுர்ஜித் சிங் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று காலை திடீரென்று பஞ்சாப் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து விமானத்தில் சண்டிகர் சென்ற அவர் அங்கிருந்து காரில் பதேகார் சாகிப் கிராமத்துக்கு சென்றார்.
அங்கு தற்கொலை செய்த சுர்ஜித் சிங் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ராகுலின் பயணம் முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்டதால் அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. அந்தப் பகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் மட்டுமே அவருடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT