தேர்தலில் போட்டியிட உதயகுமார் விருப்பம்: கிறிஸ்டினா சாமி தகவல்

தேர்தலில் போட்டியிட உதயகுமார் விருப்பம்: கிறிஸ்டினா சாமி தகவல்
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சியில் அண்மையில் இணைந்த அணு உலை எதிர்ப்பாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் மற்றும் குழு உறுப்பினர் ஜேசுராஜ் ஆகிய இருவரும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் கிறிஸ்டினா சாமி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உதயகுமார், ஜேசுராஜ் ஆகிய இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி மேலிடத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை இன்னும் வகுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in