சன் டிவி விவகாரத்தில் கூட்டுமுடிவு எடுக்கப்படும்: மத்திய அரசு தகவல்

சன் டிவி விவகாரத்தில் கூட்டுமுடிவு எடுக்கப்படும்: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

டிவி சேனல்கள் நடத்துவதற்கு மத்திய அரசிடம் பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். சன் குழுமம் தனது 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலை அடுத்த பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி விண்ணப்பித்தது.

மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்து விட்டது. சன் குழும உரிமையாளர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது நிலுவையிலுள்ள வழக்குகள் காரணமாக பாதுகாப்பு ஒப்புதல் வழங்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இவ்விஷயத்தில் உள்துறை அமைச் சகத்துடன் முரண்பட்டது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தை அணுகி அதன் கருத்தைக் கேட்டது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் அவர்கள் மீது இல்லை. ஊழல் தொடர்பான வழக்குகளே இருப்பதால், பாதுகாப்பு ஒப்புதல் வழங்கலாம். ஊழல் தொடர்பு இருப்பதால் அதனடிப்படையில் பாதுகாப்பு ஒப்புதல் வழங்காமல் நிராகரிக்க வேண்டியதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.ஆனால், பாதுகாப்பு ஒப்புதலை சன் குழு மத்துக்கு வழங்கப்போவதில்லை என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “கருத்தை வெளியிடும் உரிமை உட்பட இவ்விவகாரத்தில் வெவ்வேறு கோணங்கள் உள்ளன.

வெவ்வேறு அமைச்சகங்கள் வெவ்வேறு பார்வையைக் கொண்டிருக்கலாம். ஜனநாயகத் தில் இருவேறு அணுகுமுறைகள் இருப்பது சகஜமே. ஆனால், இறுதி முடிவு என்பது கூட்டாகச் சேர்ந்து எடுக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in