Published : 09 Jun 2015 08:52 AM
Last Updated : 09 Jun 2015 08:52 AM

விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் அலுவலகம் திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் முதல்வர் முகாம் அலுவலகத்தை நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்றார். அங்கு முதல்வர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்து பேசியதாவது: இன்றோடு நான் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் பல இன்னல்களை இந்த அரசு சந்தித்துள்ளது. நிரந்தர தலைநகரம் இல்லாத காரணத்தால், தற்போது முதல்வர் அலுவலகம் ஹைதராபாத்தில் இயங்குகிறது. எனவே, விஜயவாடாவில் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த முதல்வர் அலுவலகம் வாரத்துக்கு 3 நாட்கள் செயல்படும். தேவைப்பட்டால் 5 நாட்களாக நீட்டிக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x