Published : 25 Jun 2015 06:11 PM
Last Updated : 25 Jun 2015 06:11 PM

நேபாளத்துக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி: இந்தியா அறிவிப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அறிவித்துள்ளது இந்தியா.

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இதைவிட பல மடங்கு பேர் காயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்தியா நேபாளத்துக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியது.

நிலநடுக்கத்துக்குப் பிறகு தோன்றிய நில அதிர்வுகளின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மறு கட்டுமானப் பணிகளுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் நடைபெறும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டில் பங்கேற்பதற்ற, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இத்தகவலை தெரிவித்தார். மாநாட்டில் பேசிய சுஷ்மா, "இந்திய அரசும் இந்திய மக்களும் இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களின் கண்ணீரை துடைக்க உறுதி கொண்டிருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x