Last Updated : 28 Jun, 2015 04:49 PM

 

Published : 28 Jun 2015 04:49 PM
Last Updated : 28 Jun 2015 04:49 PM

அசாம், மேகாலயா, மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்

அசாம், மேகாலயா, மேற்கு வங்கம் மற்றும் பூடான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

காலை 6.35 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி, மேகாலயா, மேற்குவங்கம், பூடான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.

அசாம் மாநிலத்தின் கோக்ரஜ்ஹார் நகரில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அந்த நகர ரயில் நிலையத்தில் பழைய சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் காய்கறி வியாபாரிகள் ஆவர்.

அசாமின் சிராங் மாவட்டத்தில் நிலநடுக்கம் காரணமாக பழங்காலத்து கோயிலில் இருந்த சிங்க சிலை அதன் பீடத்திலிருந்து கீழே விழுந்து உடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x