Last Updated : 08 Jun, 2015 03:28 PM

 

Published : 08 Jun 2015 03:28 PM
Last Updated : 08 Jun 2015 03:28 PM

அரபிக்கடலில் உருவாகியுள்ளது ‘அஷோபா’ புயல்: தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

அரபிக் கடலில் ‘அஷோபா’ புயல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் மும்பையி லிருந்து 590 கி.மீ. தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரபிக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு ‘அஷோபா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்துகொண்டே மேலும் தீவிரமடையும். இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென் மேற்கு பருவமழையின்போது தமிழகத்துக்கு அதிக அளவில் மழை கிடைக்காது என்றாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி களான மேற்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்யலாம்.

அதன்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த 2 நாட் களாக மழை பெய்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 4 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 3 செ.மீ., ஈரோடு மாவட்டம் தாளவாடி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 2 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 1 செ.மீ. மழை நேற்று பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x