Last Updated : 16 Jun, 2015 10:18 AM

 

Published : 16 Jun 2015 10:18 AM
Last Updated : 16 Jun 2015 10:18 AM

பூடான், நேபாளம், வங்கதேசத்துடன் மோட்டார் வாகன ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டார்

பூடான், நேபாளம், வங்கதேசம் ஆகிய 3 சார்க் நாடுகளுடன் முக்கியத்துவம் வாய்ந்த மோட்டார் வாகன ஒப்பந்தத்தில் இந்தியா நேற்று கையெழுத்திட்டது. இதன் மூலம் இந்நாடுகள் இடையே பயணிகள் மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து எளிதாகும்.

வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம் (பி.பி.ஐ.என்) ஆகிய நாடுகள் இடையிலான இந்த மோட் டார் வாகன ஒப்பந்தத்தில் (எம்.வி.ஏ) மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் 3 நாடுகளின் போக்குவரத்து அமைச் சர்கள் பூடான் தலைநகர் திம்புவில் நேற்று கையெழுத்திட்டனர்.

இந்த உடன்பாடு மூலம் 4 நாடுகள் இடையே போக்குவரத்து செலவு குறைவதுடன் பல்வகை போக்குவரத்து வசதிகளுக்கான வளர்ச்சி துரிதப்படுத்தப்படும். மேலும் இந்நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, “நமது நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வகை மோட்டார் வாகனங்களும் நமது பகுதியில் தடையின்றி செல்ல இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. நமது பிராந்தியத் தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக ஒருங் கிணைந்து செயல்பட நமது தலைவர் கள் உறுதிபூண்டுள்ளனர். இதை அங்கீகரிக்கும் வகையில் இது முதல் மற்றும் சிறிய நடவடிக்கை யாக இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஆகும்” என்றார்.

பிபிஐஎன் எம்விஏ என்ற இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்து வதற்கான செயல் திட்டத்தை நான்கு நாடுகளும் வரும் ஜூலை முதல் 6 மாதங்களுக்குள் வகுக்க உள்ளன.

நிகழ்ச்சியில் நிதின் கட்கரி மேலும் பேசும்போது, “நமது துணைக் கண்டத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் வகை யில் மற்றொரு முக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப் படுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற உடன்பாட்டை மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனும் இந்தியா செய்துகொள்ள உள்ளது. இதற்கு அந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இது தொடர்பாக செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை பெங்களூருவில் இம்மாதம் நடைபெற்றது. இதில் உடன்பாடு அம்சங்கள் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, நமது துணைக் கண்டத்தின் சந்தை வாய்ப்புகள் விரிவடையும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x