Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பை, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸுக்கு வெள்ளிக்கிழமை சி.வி. விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வடமாகாண மக்களின் சொல் லொணாத் துயரங்கள், வடமாகாண சபையை இயங்கவிடாது ஏற்படுத் தப்பட்டுள்ள தடைகள், இவற்றின் மத்தியில் இலங்கை அதிபரின் அழைப்பு வரவேற்கத்தக்கதே.
எனினும், தங்களின் அன்பான அழைப்பை ஏற்க முடியாததற்கு வருந்துகிறேன். ஏற்காததற்குக் காரணம் இலங்கை அரசுக்கும், வடமாகாணத்திற்கும் இடையில் மிக வலுவான உறவு இருப்பதாக இது எடுத்துக்காட்டக் கூடும்.
மேலும், வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் ராணுவத்தினர் மக்களை பதற்றத்துடனே வாழச் செய்து வருகின்றனர். வடமாகாண சபையைப் பொறுத்தவரையில், அதன் நடவடிக்கைகள் கட்டுப்படுத் தப்பட்டுள்ளன என்பதே உண்மை நிலை.
தங்களின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து, முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். எனினும், இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திரமோடிக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை நான் ஏற்கெனவே அனுப்பியுள்ளேன் என்பதையும் தங்களுக்கு தெரியப் படுத்துகிறேன்.
உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால்தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்த பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன். நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வட மாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு அடையாளமே.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.
முன்னதாக இந்தியாவின் புதிய பிரதமராக பாஜக தலைவர் நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தன்னுடன் டெல்லிக்கு வரும்படி இலIங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற் பதில் தான் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ள ராஜபக்சே அழைப்பு விடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சீனாவுக்கு பயணம் சென்று வியாழக்கிழமை இரவு தாயகம் திரும்பியதும் ட்விட்டரில் பதிவு செய்த அறிக்கையில் இந்த நன்றி அறிவிப்பை அவர் வெளியிட்டி ருக்கிறார்.
இதனிடையே, இந்தியப் பிரதம ராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் அதிபர் மகிந்த ராஜபக்சே பங்கேற்கவுள்ளார் என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT