Published : 25 Jun 2015 10:28 AM
Last Updated : 25 Jun 2015 10:28 AM
உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டம் மற்றும் மாநில அரசின் பாடத் திட்டத்தில் படித்த 39,600 மாணவர்கள் இதனால் பலன் அடைவார்கள் என்ற மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் மேலும் கூறும் போது, “இந்த 39,600 மடிக்கணினி களும் சரிபாதி அளவில் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். பயனாளிகள் பட்டியலில் 20 சதவீதம் சிறுபான்மையின மாணவர்களும் 21 சதவீதம் எஸ்சி, எஸ்டி மாணவர்களும் இடம்பெறுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT