Last Updated : 09 Jun, 2015 08:33 AM

 

Published : 09 Jun 2015 08:33 AM
Last Updated : 09 Jun 2015 08:33 AM

ஐஎன்எஸ் டெல்லி கப்பலில் தீ விபத்து

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டெல்லி போர்க் கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பை கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலில் கடந்த சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் இருந்த தீயணைப்பு சாதனங்களை கொண்டே அதிலிருந்த வீரர்களால் இத்தீ அணைக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. என்றாலும் இவற்றுக்கு அவசியம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x