Published : 29 Jun 2015 10:04 AM
Last Updated : 29 Jun 2015 10:04 AM
மேற்குவங்க மாநில மித்னாபூரில் ஐடிஐ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்த மாணவர் அதில் தனது புகைப்படத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
மித்னாபூரைச் சேர்ந்தவர் சவுமியதீப் மஹதோ (18). ஐடிஐ நுழைவுத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை அவர் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அப்போது, நுழைவுச் சீட்டில் தனது புகைப்படத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம் இருப்பதைப் பார்த்து மாணவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேர்வுகளை நடத்தும் அதிகாரியை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இதனையடுத்து மாலையில் அவரது தேர்வு அனுமதிச் சீட்டில் பதிவாகியிருந்த நாயின் புகைப்படம் நீக்கப்பட்டது. புதிதாக நுழைவுச் சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்தி மஹதோ தேர்வு எழுதியுள்ளார்.
இருப்பினும், மாணவர் புகைப்படத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம் வந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT