Published : 17 Jun 2015 10:19 AM
Last Updated : 17 Jun 2015 10:19 AM
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நடைமுறை களின்படி ராணுவ வீரர் ஓய்வுபெற்ற காலத்தில் அமலில் இருந்த ஊதிய கமிஷன் பரிந்துரையின்படி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத னால் ஓய்வூதியத்தில் ஏற்றத்தாழ்வு கள் நிலவுகின்றன.
இந்தக் குறையைப் போக்கி ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துமாறு ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.
இப் பிரச்சினையை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்திருப்பதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராணுவ வீரர்களின் பிரச்சினையை மையப்படுத்த ஜனதா கட்சிகளும் காங்கிரஸும் திட்டமிட்டுள்ளன.
எனவே பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியபோது, திட்டம் தொடர்பான கோப்பு தயார் செய்யப்பட்டு நிதி அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி யமைச்சகம் அனுமதி அளித்தவுடன் திட்டம் அமல் செய்யப்படும் என்று தெரிவித்தன.
இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வெளியிடுவார் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT