Published : 21 May 2014 10:53 AM
Last Updated : 21 May 2014 10:53 AM
மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக, உத்தரப்பிரதேசத் தில் ஆளும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்கள் 36 பேரின் அரசுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இணை அமைச்சர் பதவிக்கு இணையான பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள். பதவி பறிக்கப்பட்டவர்களில் 6 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முதல்வர் அகிலேஷ் யாதவ் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்தது. இக்கூட்டத்துக்கு பிறகு கட்சியின் அனைத்து அமைப்பு களையும் கலைத்து மாயாவதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT