Published : 11 May 2015 02:48 PM
Last Updated : 11 May 2015 02:48 PM

தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் இருப்பது உறுதி: ராஜ்நாத் சிங்

சர்வதேச நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதற்கான நம்ப தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடந்த வாரம் மக்களவையில், தாவூத் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அவரது இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்ததால் சர்ச்சை கிளம்பியது.

இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவேன் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இந்த நிலையில் மக்களவையில் பேசிய அவர், "1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சர்வதேச நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹீம் ப பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

தாவூதை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியின் அனைத்து தடைக் கற்களையும் மத்திய அரசு தகர்க்கும்" என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x