Published : 15 May 2015 12:31 PM
Last Updated : 15 May 2015 12:31 PM
நேபாளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மீண்டும் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. 2,760 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏப்ரல் 25 நிலநடுக்கம் முதல் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் வரை மொத்த பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டிவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT