Last Updated : 01 May, 2015 07:34 AM

 

Published : 01 May 2015 07:34 AM
Last Updated : 01 May 2015 07:34 AM

62 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள் அமைத்தது, பராமரிப் புக்கு செலவிடப்பட்ட தொகை, டோல் பிளாசாக்கள் மூலம் பல இடங் களில் வசூலாகி விட்டது. அரசு செல விட்ட முதலீடு முழுமையாகக் கிடைக்கும் இடங்களில் அமைக் கப்பட்ட டோல் பிளாசாக்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன் படி, ஆந்திரம், தமிழகம், தெலங் கானா, உத்தரப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலை களில் மொத்தம் 62 இடங்களில் டோல் பிளாசாக்கள் அகற்றப்பட்டு விட்டன. அரசு செலவிட்ட பணம் கிடைத்ததாலும், மக்கள் நலனைக் கருதியும் டோல் பிளாசாக்கள் மூடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x