Last Updated : 04 May, 2015 08:44 AM

 

Published : 04 May 2015 08:44 AM
Last Updated : 04 May 2015 08:44 AM

ரூபாயை கூட மணமகனுக்கு எண்ணத் தெரியவில்லை: திருமணத்தை நிறுத்தினார் இளம்பெண்

ரூபாய் நோட்டுகளைகூட எண்ணத் தெரியாத மணமகன் வேண்டாம் என்று கடைசி நேரத்தில் இளம்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் பாலியா மாவட்டம், மாரிடர் கிராமத்தில் மனோஜ் என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக் கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண விழா நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, மணமகன் படிப்பறிவில்லாத வர் என்பது அந்தப் பெண் ணுக்கு தெரியவந்தது.

இதை சோதித்தறிய திட்ட மிட்ட அப் பெண், மணமகன் மனோஜிடம் ரூபாய் நோட்டு களை கொடுத்து அதை எண்ணு மாறு கூறினார். ஆனால் அவரால் ரூபாய் நோட்டுகளை கூட எண்ணத் தெரியவில்லை. அதிர்ச்சியடைந்த மணமகள், திருமணத்தை நிறுத்தினார். இதனால் இரு குடும்பத்தா ருக்கும் சண்டை ஏற்பட்டது. உள்ளூர் தலைவர்கள் தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x