Published : 21 May 2015 07:30 PM
Last Updated : 21 May 2015 07:30 PM
"முதல் ஆணி டெல்லி தேர்தல் முடிவுகள், 2-வது ஆணி நிலம் கையகப்படுத்தும் மசோதா" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்று கூடி பாஜக-வை பிஹாரில் தோற்கச்செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"பிஹார் தேர்தல்கள் பாஜக சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் 3-வது ஆணியாக இருக்கும், முதல் ஆணி டெல்லி தேர்தல், 2-வது ஆணி நிலம் கையகப்படுத்தும் மசோதா” என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
பிஹார் தேர்தலில் ஜனதா பரிவார் கட்சிகள் இணைவதில் இருந்து வரும் நிச்சயமின்மைகள் பற்றி அவர் கூறும் போது, “நிறைய நிழல்-யுத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் உரிய நேரத்தில் இணைந்து பாஜக-வுக்கு தகுதியான சிகிச்சையை பிஹார் தேர்தலில் அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT