Published : 16 May 2015 08:45 AM
Last Updated : 16 May 2015 08:45 AM

சொத்து தகராறில் தாய், மனைவி, மகளை கொன்ற விவசாயி

ஹைதராபாத் பாலாபூர் சாய்நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப் பவர் விவசாயி ராமிரெட்டி (45). இவருடன் இவரது தந்தை பல்வந்த் ரெட்டி (65), தாயார் சுபத்ரம்மாள் (60), மனைவி ராதிகா (35) மகள்கள் பிரதியூஷா (15), அக்‌ஷயா (14) ஆகியோரும் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்பின் மேல் மாடியில் ராமிரெட்டியின் அண்ணன் கோவிந்த ரெட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக சகோதரர்கள் இடையே தகராறு இருந்துள்ளது. இதில் ராமிரெட்டியின் பெற்றோர், மனைவி மற்றும் மகள்கள் கோவிந்த ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமிரெட்டி, நேற்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த தாயார் சுபத்ரம்மாள், மனைவி ராதிகா, இளைய மகள் அக்‌ஷயாவை கழுத்தை அறுத்து கொன்றார். இதைக் கண்ட மூத்த மகள் பிரதியூஷா அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் தப்பியோடிய ராமிரெட்டி, சிறிது தொலைவில் உள்ள கிணற்றில் குதித்தார்.

தகவலறிந்து பஷிடி ஷரீப் போலீஸார் ராமிரெட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x