Published : 12 May 2015 06:55 PM
Last Updated : 12 May 2015 06:55 PM
மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் உள்ள பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இயக்குநர் கபீர் கான் இயக்கி வரும் படம் 'பஜ்ரங்கி பைஜான்'. இதில் கதாநாயகனாக சல்மான் கான் நடிக்கிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி டெல்லியில் இப்படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. பின்னர், மேற்கண்ட வழக்கில் அவருக்கு தீர்ப்பு வழங்கவிருப்பதையொட்டி சில நாட்கள் படப்பிடிப்புக்குச் செல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், ஜாமீனில் உள்ள சல்மான் கான், காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குநர் கபீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "சல்மான் கான் மீண்டும் வந்துவிட்டார். கடைசி 5 நாள் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின், சூரஜ் ஆர்.பர்ஜாத்தியாவின் இயக்கத்தில் 'பிரேம் ரத்தன் தன் பயோ' என்ற படத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT