Last Updated : 15 May, 2015 07:54 AM

 

Published : 15 May 2015 07:54 AM
Last Updated : 15 May 2015 07:54 AM

செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது வழங்கினார் பிரணாப்: ஜெர்மனியின் ஈவாவுக்கு குறள் பீடம் விருது

செம்மொழி தமிழின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் அறிஞர்களுக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படு கின்றன. தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்துக்கு செம்மை சேர்க்கும் அறிஞர்களின் பணி களை அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களை கவுரவிக்கவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

வாழ்நாள் சாதனையாளர் களுக்கு ஆண்டுதோறும் ஒரு ‘தொல்காப்பியர் விருது’ வழங்கப் படுகிறது. தவிர தமிழுக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் வெளிநாட் டினருக்கு குறள் பீடம் விருதுகள், தமிழிலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டும் 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்படு கின்றன. இந்நிலையில் கடந்த 2011 - 12 மற்றும் 2012 -13-ம் ஆண்டு களுக்கான விருதுகள், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று வழங்கப்பட்டன.

2011-12-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகத்துக்கு வழங்கப்பட்டது. 2012-13-ம் ஆண்டுக்கான தொல் காப்பியர் விருது தினமலர் ஆசிரி யரும் நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வழங் கப்பட்டது. ஜெர்மனியை சேர்ந்த ஈவா மரியாவில்டனுக்கு குறள் பீடம் விருது வழங்கப்பட்டது. கா.அய்யப்பன், இ.எழில் வசந்தன், கே.ஜவகர், ஏ.சதீஷ், ஆர்.வெங்கடேசன், பி.ஜெய் கணேஷ், எம்.ஆர்.தேவகி, உ.அலிபாவா ஆகியோருக்கு ‘இளம் அறிஞர் விருது’கள் வழங் கப்பட்டன. விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் வழங்கி தமிழறி ஞர்களை கவுரவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x