Published : 19 May 2015 08:18 AM
Last Updated : 19 May 2015 08:18 AM

அருணாவை பலாத்காரம் செய்த சோஹன்லால் மீது பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்படவில்லை

அருணாவை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற சோஹன்லால் பரதா வால்மீகி மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்படவில்லை. இதற்கிடையே, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை முடித்து விடுதலை ஆகி விட்டார்.

கேஇஎம் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்த அருணா ஷன்பாக், வார்டு பாய் சோஹன்லால் பரதா வால்மீகி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது, நாயை கட்டிப்போடும் சங்கிலியால் அருணாவின் கழுத்தை வால்மீகி நெரித்ததால் அருணாவின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனும் ரத்தமும் தடைபட்டு கோமா நிலையை அடைந்தார்.

இதுதொடர்பாக சோஹன்லால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி மற்றும் நகைகளை திருடியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அவர் மீது பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை. அருணா பலாத்காரம் செய்யப்பட்டதை போலீசார் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வால்மீகிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து சிறை தண்டனை அனுபவித்து வந்த சோஹன்லால் 1980-ல் சிறையிலிருந்து விடுதலையானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x