Published : 21 May 2014 10:15 AM
Last Updated : 21 May 2014 10:15 AM

குஜராத் புதிய முதல்வர் ஆனந்திபென் பட்டேல்?

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக அந்த மாநில வரு வாய்த் துறை அமைச்சர் ஆனந்தி பென் பட்டேல் (73) தேர்ந்தெடுக் கப்படுவார் என்று தெரிகிறது.

குஜராத்தின் இப்போதைய முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

மோடிக்கு மிகவும் நெருக்க மான அமித் ஷா, மூத்த அமைச் சர்களின் பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன. இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆனந்திபென் பட்டேல் குஜராத்தின் புதிய முதல்வராக 95 சதவீத வாய்ப்புகள் உள்ள தாக கட்சி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

புதிய முதல்வரைத் தேர்ந் தெடுப்பது தொடர்பான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காந்திநகரில் புதன்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.

குஜராத்தின் புதிய முதல்வர் வியாழக்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.

ஆனந்திபென் பட்டேல் யார்?

1980-களில் ஆனந்திபென் பட்டேல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 1987-ல் இரு மாணவிகள் சர்தார் சரோவர் அணையில் மூழ்கியபோது ஆனந்திபென் அணையில் குதித்து இரு வரையும் காப்பாற்றினார். இதற்காக மாநில அரசின் சார்பில் அவருக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.

நரேந்திர மோடியும் ஆனந்திபென் பட்டேலும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். மோடி உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் தன்னுடைய 45-வது வயதில் ஆனந்திபென் அரசியலில் நுழைந்தார்.

15 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழும் அவருக்கு சஞ்சய் என்ற மகனும் அனர் என்ற மகளும் உள்ளனர்.

மோடி இன்று ராஜினாமா

இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்கிறார்.

கடந்த 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார். தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநில முதல்வராக நீடித்த அவர் வரும் 26-ம் தேதி இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் குஜராத் ஆளுநர் கமலா பெனிவாலை அவர் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x