Last Updated : 03 May, 2015 05:45 PM

 

Published : 03 May 2015 05:45 PM
Last Updated : 03 May 2015 05:45 PM

ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது: மத்திய அமைச்சர் உறுதி

ரயில்வே துறை அரசுடைமையாகவே இருக்கும், அரசாங்கத்தாலேயே நிர்வகிக்கப்படும். ஒருபோதும் தனியார்மயமாக்கப்படமாட்டாது என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிடிஐ செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில், "ரயில்வே துறை அரசுடைமையாகவே இருக்கும், அரசாங்கத்தாலேயே நிர்வகிக்கப்படும். ஒருபோதும் தனியார்மயமாக்கப்படமாட்டாது.

ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. சிக்னல் மேலாண்மை போன்ற தொழில்நுட்ப மேலாண்மையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. எனவே ரயில்வே துறையை தனியார்மயமாக்குவது சாத்தியமில்லை.

அதேவேளையில், ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும். ரயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வர தனியார் நிறுவனங்களின் உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மாற்றங்களையே, ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுகிறது என சிலர் பொய்யான தகவலாக பரப்பி வருகின்றனர். விலை மதிப்புள்ள ரயில்வே துறையின் சொத்துகளை தனியார் வசம் ஒப்படைக்க மாட்டோம்" என்றார்.

பொருளாதார வல்லுநர் விவேக் ஓபராய் தலைமையில் மத்திய அரசு அமைத்த குழுவானது, ரயில்வே துறை இழப்புகளை சரிகட்ட தனியார்மயமாக்குவதை பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இக்கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x